வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Independent Writer Dec 10, 2024 08:38 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்றையதினம் (10) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இலங்கை அரசிடம் நீதி கோரியபோதும், தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி! அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி! அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்

யாழ்ப்பாணம் 

யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் குறித்த போராட்டமானது காலை பத்து முப்பது மணி அளவில் இடம்பெற்றது.


இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Disappeared Stage A Protest Demanding Justice

செய்தி - தீபன் 

கிளிநொச்சி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு பேரணி காக்கா கடை சந்திவரை இடம்பெற்றது.

செய்தி - எரிமலை

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Disappeared Stage A Protest Demanding Justice

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டனர்.

செய்தி - ஷான்

மன்னார் 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இன்றைய தினம் (10) காலை 11 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாட்டில் இளையோர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Disappeared Stage A Protest Demanding Justice

இளையோர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் குரல் கொடுக்கும் முகமாக குறித்த ஊர்வலம் நடைபெற்றது.

செய்தி - ஆஷிக்

வவுனியா

வவுனியா, கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று (10) ஆரம்பமாகிய குறித்த பேரணி அங்கிருந்து பசார் வீதி வழியாக வந்து பழைய பேருந்து நிலையப் பகுதியில் முடிவடைந்தது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Disappeared Stage A Protest Demanding Justice

சர்வதேசமும் அனைத்துலகமும் ஈழத்தமிழரை கைவிட்ட நிலையில் மனிதர்களாக எம்மை பார்ப்பதில்லை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. நமக்கு சர்வதேச நீதிவருமா? என்ற கோள்வியோடு இந்த தினத்தில் நாம் போராடி வருகிறோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர். 

செய்தி - திலீபன் 

மட்டக்களப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடினர்.

செய்தி - பவன்

திருகோணமலை 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரனையே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

செய்தி - றொஷான்

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

பெண்கள் வலையமைப்பு பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் 'உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்' சஞ்சிகை வெளியீடும், பெண்களுக்கான ஒரு நாள் இலவச பஸ் சேவை ஆரம்பித்து வைப்பும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை (10) காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இறுதி நாள் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.லலித் லீலாரட்ன பிரதேச செயலாளர்களான வீ.வாசுதேவன், சிவப்பிரியா வில்வரத்தினம்.

இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் கந்தசாமி சிறிதரன், கலந்துகொண்டு 'உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்' எனும் சஞ்சிகை வெளியிட்டு வைத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Disappeared Stage A Protest Demanding Justice

மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது

மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US