மட்டக்களப்பில் முடக்கப்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகள் நாளை விடுவிப்பு
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமீன்மடு,கல்லடிவேலூர், திருச்செந்தூர் ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளும் நாளை செவ்வாய்கிழமை (01) காலையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகள் கடந்த 18 ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த பகுதிகளில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் தொற்றாளர்கள் இனங்காணப்படாததையடுத்து பாலமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், கிராம சேவகர் பிரிவுகளை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டு குறித்த 3 கிராமசேவகர் பிரிவுகளும் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளது.
அதேவேளை நொச்சிமுனை, சின்ன ஊறணி ஆகிய இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்
மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குக்கும் என அவர்
தெரிவித்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
