தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை விவகாரம்!இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல்
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மருத்துவ அதிகாரிகளின் அறிக்கை
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் எரான் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக நீதித்துறை மருத்துவ அதிகாரிகளின் அறிக்கை முதலில் கூறியது.
பின்னர் அதே நீதித்துறை மருத்துவ அதிகாரிகளால் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது எப்படி முடியும்?
வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் சிக்கல்
வெளிநாட்டு வர்த்தகர்கள் பொதுவாக உள்ளூர் முதலீட்டாளர்களால் அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உண்மையில் தங்கள் உள்ளூர் சகாக்களுடன் வேலை செய்கிறார்கள்.
எனவே, தமது உள்ளூர் சகாக்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்தால், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது பற்றி இலங்கை சிந்திக்க முடியாது.
ஷாப்டர் குடும்பம் தனக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த வழக்கை ஜனாதிபதி கவனிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
