கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் வர்த்தகர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளுக்கு உதவியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அரச பகுப்பாய்வாளருக்கு நேற்று (04.05.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் முன்மொழியப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை மீண்டும் மே 8 ஆம் திகதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு பணியாற்றிய தாதிகள் உட்பட பத்து ஊழியர்களின் DNA அறிக்கையை பெற நீதிமன்றம் தீர்மானித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மேலும் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் உண்மையை கண்டறியும் வகையில் நீதிமன்றினால் அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர் அசேல மெண்டிஸ், பேராசிரியர் டி.சி.ஆர். பெரேரா, பேராசிரியர் டி.என்.பி. பெர்னாண்டோ, கலாநிதி சிவ சுப்ரமணியம் மற்றும் கலாநிதி ரொஹான் ருவன்புர ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 100 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
