ரணிலுடனான கூட்டணி சாத்தியமற்றது: திலித் ஜயவீர சுட்டிக்காட்டு
எதிர்வரும் தேர்தல்களில் ரணிலுடன் கூட்டணி சேரப் போவதில்லை என ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொள்ளத் தவறியுள்ளார்.
விவசாயத்துறைக்கான முக்கியத்துவம்
மேலும், நாடாளுமன்றில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் விவசாயத்துறைக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாகவும் இது பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டுக்கு இளம் விவசாய தொழில்முனைவோரின் பங்களிப்பு அவசியமாகின்றது என திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
