திரைப்படம் தயாரித்த திலினி பிரியமாலி-நடிகர் ஜீவன் குமாரதுங்கவிடமும் விசாரணை
பல பில்லியன் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க மற்றும் அவரது மனைவி செரீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜீவன் குமாரதுங்கவும் அவரது மனைவியும் கடந்த சனிக்கிழமை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
ஜீவன் குமாரதுங்கவின் வாழ்க்கை அடிப்படையாக கொண்டு ஜீவா என்ற திரைப்படத்தை தயாரிக்க திலினி பிரியமாலி பணத்தை செலவிட்டதாக கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.