இலங்கையில் இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையில் அடுத்து வாரங்களில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டை
அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை முன்னெடுக்க சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான ஒரு பகுதியை இந்திய உதவி மூலம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா்.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam