இலங்கையில் இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையில் அடுத்து வாரங்களில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டை
அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை முன்னெடுக்க சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான ஒரு பகுதியை இந்திய உதவி மூலம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri