இலங்கையில் இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையில் அடுத்து வாரங்களில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டை
அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை முன்னெடுக்க சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான ஒரு பகுதியை இந்திய உதவி மூலம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri