சஜித் அணியின் முக்கிய பிரபலம் ரணில் தரப்புடன் சந்திப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சில மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த பழனி திகாம்பரம், நாடு திரும்பியதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு தொடர்பில் இருதரப்பில் இருக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் வெளிவரவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில், பழனி திகாம்பரம் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
