இலங்கையில் எரிபொருள் நெருக்கடி! டீசல் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் பொதுச்செயலாளர் பந்துல சமன் குமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷவும் இதன்போது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
டீசல் இருப்பு
இருப்பினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே, அடுத்த மாத இறுதி வரை நிறுவனத்திடம் டீசல் இருப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

டீசல் ஆர்டர்களை கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்து, எரிபொருளை தொடர்ந்து வழங்குவதாக லங்கா ஐஓசி நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதன்படி, நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க லங்கா ஐஓசி மற்றும் அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. ரகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri