மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர் பதற்றம்! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணி்க்கை
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான கடுமையான தாக்குதல்களால் மத்திய கிழக்கில் 12 நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, பிராந்தியம் முழுவதும் இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் பலி எண்ணி்க்கை
இது தொடர்பில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரான் அதிக சேதத்தை சந்தித்துள்ளதுடன், 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 18,551 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டாவது அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ள லெபனானில் 687 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,774 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரானிய தாக்குதல்களில் இஸ்ரேலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் ஈராக்கில் 27 இறப்புகள் பதிவாகியுள்ளன.
பிற நாடுகளிலும் ஈரான் தாக்குதல்கள்
இந்த மோதல்களில் 11 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் 140-150 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளிலும் ஈரான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, குவைத்தில் 6 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) 6 பேர், ஓமானில் 3 பேர் மற்றும் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூடுதலாக, கத்தார் (16 பேர் காயமடைந்தனர்), ஜோர்டான் (14 பேர் காயமடைந்தனர்) மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளும் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தரவுகள் காட்டுகின்றன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 17 மணி நேரம் முன்
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri