முல்லைத்தீவு மாவட்டத்தில் டீசலுக்கு தட்டுப்பாடு
முல்லைத்தீவு மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான விலை மாற்றங்கள் நாளை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனால் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
பாதிக்கப்படும் போக்குவரத்து
அத்துடன், விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நிலத்தை பண்படுத்துவதற்கு உளவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
அதேவேளை, போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளிற்கு டீசல் இல்லாத காரணத்தினால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு லீட்டர் டீசல் 307 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
