வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்களா? ஶ்ரீலங்கா கிரிக்கட் விளக்கம்
இலங்கை கிரிக்கட் அணியின் வீர்ர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்கள் என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் பதிலளித்துள்ளது.
அண்மையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டுவன்ரி20 போட்டித் தொடரில் விளையாடிய சில வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வீரர்கள் மோசமாக விளையாடினார்கள் என எந்தவொரு முறைப்பாடும் அணி முகாமைத்துவத்திடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியான செய்திகளை வெளியிடுவதனால் அணி வீரர்கள் பாதிக்கப்படக் கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கட் சுட்டிக்காட்டியுள்ளது.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
