வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்களா? ஶ்ரீலங்கா கிரிக்கட் விளக்கம்
இலங்கை கிரிக்கட் அணியின் வீர்ர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்கள் என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் பதிலளித்துள்ளது.
அண்மையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டுவன்ரி20 போட்டித் தொடரில் விளையாடிய சில வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வீரர்கள் மோசமாக விளையாடினார்கள் என எந்தவொரு முறைப்பாடும் அணி முகாமைத்துவத்திடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியான செய்திகளை வெளியிடுவதனால் அணி வீரர்கள் பாதிக்கப்படக் கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கட் சுட்டிக்காட்டியுள்ளது.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது.
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam