வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்களா? ஶ்ரீலங்கா கிரிக்கட் விளக்கம்
இலங்கை கிரிக்கட் அணியின் வீர்ர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்கள் என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் பதிலளித்துள்ளது.
அண்மையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டுவன்ரி20 போட்டித் தொடரில் விளையாடிய சில வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வீரர்கள் மோசமாக விளையாடினார்கள் என எந்தவொரு முறைப்பாடும் அணி முகாமைத்துவத்திடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியான செய்திகளை வெளியிடுவதனால் அணி வீரர்கள் பாதிக்கப்படக் கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கட் சுட்டிக்காட்டியுள்ளது.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 23 நிமிடங்கள் முன்
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri