இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு

பிரதிநிதிகள் குழு இலங்கையில் ஒரு வார காலம் தங்கியிருந்து பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நீண்ட ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலைமை குறித்து பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
இலங்கைக்கு உதவுவதாக நிதியம் தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாகக் கூறிய ஜனாதிபதி, கடினமான காலங்களில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri