சீரற்ற காலநிலையால் பரவும் நோய்கள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரவும் நோய்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கண் நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்கள், போன்ற மூன்று நோய்கள் அதிக உடல் வெப்பநிலையுடன் சேர்ந்து, வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்பு
இந்த நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட சுகாதாரத்தை பேண வேண்டும் என அவர் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, அண்மையில் நீரில் மூழ்கிய பிரதேசங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.