ஜூன் மாதம் டயானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான தீர்ப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவுள்ளது.
டயானா கமகேவின் நாடாமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடுமாறு கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரித்தானிய பிரஜை என்ற அடிப்படையில் கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை
தகுதி நீக்கம் செய்ய இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
