சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo)

Mullaitivu Sri Lanka Politician T saravanaraja
By Shan Sep 30, 2023 10:07 AM GMT
Report

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு(Video)

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு(Video)

நீதிமன்றத் தீர்ப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளதாக தற்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு கொண்டு இருக்கிறது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் உலக அரங்கில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் பதவி விலகலால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo) | Dhu Ravigaran Speech Mullaitivu Judge Resigns

AR-673 (2018) என்ற வழக்கில் பௌத்த விகாரை கட்டப்படுகின்ற போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற கருத்தை உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டு அதன் பிரகாரம் சட்டத்தரணிகள் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்ததன் இறுதி தீர்ப்பே (31.08.2023) ல் நடைபெற்றிருந்தது.

இறுதி தீர்ப்பில் தொல்லியல் திணைக்களத்தினுடைய பாராமுகத்தை மூன்று முறைகள் நீதிமன்ற கட்டளைகளை மீறியுள்ளார்கள் என்ற கருத்து உட்பட அங்கே சைவ சமயத்திற்கு மறுப்பு தெரிவிக்காத வகையில் சைவ வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது.

சர்வதேச நடவடிக்கை

நீதிபதி இலங்கை நாட்டிலே தொல்லியல் திணைக்களத்தினுடைய அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அச்சுறுத்தல் பல் வகையில் வழங்கப்பட்டு சட்டமா திணைக்களத்திற்கு வருகை தருமாறு கூறி அங்கே தீர்ப்பை மாற்றி அமைக்கும்படி கூறப்பட்டிருக்கிறது.

இதனை விட புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தீவிரம் , பாதுகாப்பு குறைக்கப்பட்டமை , சரத்வீரசேகர போன்ற இனவாதிகளால் அச்சுறுத்தல்கள் இவ்வாறான சூழ்நிலையில் பதவி விலகல் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. நீதிபதிக்கே இந்த நிலமை என்றால் தமிழ் மக்களுக்கு எந்த நிலைமை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo) | Dhu Ravigaran Speech Mullaitivu Judge Resigns

தமிழ் மக்களை பொறுத்தவரை இருள் சூழ்ந்த நாடாகவே பார்க்கப்படுகின்றது. பெயருக்கு தான் ஜனநாயக சோசலிச குடியரசு நாடாக கூறுகிறார்களே தவிர ஜனநாயகத்தை தேடினாலும் கிடைக்காது.

தமிழர்களாகிய நாங்கள் நசுக்கபடுகிறோம், எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, எமது மதத்தை அழிக்கிறார்கள், பௌத்த மதத்தை திணிக்கிறார்கள், சட்ட விரோத தொழில்களால் கடற்தொழில் செய்ய முடியவில்லை.

காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் கடத்தப்படுகின்றன, கனியமணல் அகழப்படுகின்றன, கருங்கல் அகழ்வு , கசிப்பு, கஞ்சா போதைப்பொருட்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு பாடசாலைக்கும் புகுந்து விட்டது. இவ்வாறான நிலமையில் நியாயமான நீதிபதியை வெளியேற்றிவிட்டு நாடு போகும் போக்கு நன்றாகவே தெரிகிறது.

தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுபான்மை மக்கள் இனத்திற்கான பாதுகாப்பிற்கான நாடாக நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக சர்வதேசம் கவனத்தில் எடுத்து சுமூகமான , நியாயமான தீர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு கண்டிப்பாக பொறுப்பு கூற வைக்க வேண்டும் .

அத்துமீறி நடக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

கிழக்கு மாகாணத்தில் இரு வாரங்களாக பால் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் (Photos)

கிழக்கு மாகாணத்தில் இரு வாரங்களாக பால் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் (Photos)

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US