கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30மணிக்கு இனை தலைவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது.
இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் துறைசார் திணைக்கள அதிகாரிகளெனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் துறை ரீதியான முன்னேற்றம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக சேவைகள், சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் போன்ற பல்வேறு விடையங்கள் இதில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri