மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரொருவருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு
மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரொருவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுண கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சஞ்சய சிரிவர்த்தனவுக்குச் சொந்தமான அத்தனகல்ல, பெதியாகொட, வெலிகடமுல்லை பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் இருந்து நேற்றைய தினம் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தது.
தடுப்புக் காவல் உத்தரவு
Tரக துப்பாக்கியொன்று, இரண்டு மெகசின்கள், 130 துப்பாக்கி ரவைகள், பல்குழல் துப்பாக்கியொன்றும் அதற்கான தோட்டாக்கள் ஆறு உள்ளிட்ட ஆயுதங்கள் அவற்றில் உள்ளடங்கியிருந்தன.

இதனையடுத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சஞ்சய சிரிவர்த்தனவை இன்றைய தினம் பொலிஸார் அத்தனகல்லை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.
அதன் பிரகாரம் அவரை 48 மணிநேரங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam