இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர் விடுதலை
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் 17 பேர் இன்று (27.09.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்களும் கடந்த 13 ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களது மூன்று விசைப்படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதிவான் உத்தரவு
இந்நிலையில் குறித்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் நிபந்தனையுடன் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உரிமை கோரிக்கை வழக்கின் பின்னர் கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்க மன்றில் தீர்மானிக்கப்பட்டதாக நீரியல் வள திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தெரிவித்துள்ளார்.




சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
