யாழ்.மாவட்டத்தில் இன்று செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான விபரம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பமாகியது.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்துக்காக 50 ஆயிரம் ‘சினோபார்ம்’ தடுப்பூசி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் முதல் கட்டமாக 49 ஆயிரத்து 602 பேருக்கு முதல் கட்டமாக கொரோனாத் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது.
இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த ஜூன் 28ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெற்றன. இதில் 46 ஆயிரத்து 648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.






ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
