தேசபந்து தென்னகோன் வழக்கு! உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2023்ம் வருடத்தில் மாத்தறை, வெலிகம W15 சுற்றுலா விடுதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்றைய தினம் நெவில் சில்வா மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
சரீரப் பிணை
அதனையடுத்து அவரை தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2023்ம் வருடத்தில் மாத்தறை, வெலிகம W15 சுற்றுலா விடுதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, குறித்த வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபராவார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri