தேசபந்து தென்னக்கோனை தாக்கிய மூவர் கைது!
இலங்கையின் மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இதனை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பில் வைத்து தென்னகோன் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்
காலிமுகத்திடல் போராட்டத்தின்போது நேற்று தென்னகோன் முன்னிலையிலேயே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சுட்டிக்காட்டியே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்