பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பரபரப்புத் தகவல்
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள சுமார் 134 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ ஆலோசனை
மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளத் தவறும் நபர்கள் சேவையிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

போதைப பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan