விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த கட்டுப்பாடு நீக்கம்
விமானப் பயணிகள் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்தில் பயணிக்கக் கூடிய மொத்த பயணிகள் எண்ணிக்கை 75 வீதமாக வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினால் இந்த வரையறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்ட பயணிகளுக்கு இந்த வரையறை இனி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டு பதினான்கு நாட்களின் பின்னர் பயணம் செய்யும் பயணிகளுக்கு இவ்வாறு இந்த வரையறை நீக்கப்படுவதாக சிவில் விமான சேவை அதிகாரசபை அறிவித்துள்ளது.
நாட்டுக்குள் பிரவேசிக்கும் பயணிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.