நெல் கொள்வனவு தொடர்பில் வெளியான தகவல்
நெல் கொள்வனவு செயல்முறைகளை தாம் தொடங்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(6.2.2026) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் களஞ்சியசாலைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளது.அறுவடை கிடைக்கப்பெறும் அளவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புகளை முறையாக அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகளைத் திறந்து, அறுவடை வரும் அளவைக் கண்காணித்து நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
நெல் கொள்வனவு
அதேபோல் கடந்த காலங்களில் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு வெளியிடும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.

நெல் கொள்வனவு செயல்முறைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.களஞ்சிய வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன, எனவே வருங்காலத்தில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.