பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்

Trincomalee Sri Lanka Eastern Province
By Kiyas Shafe Jun 03, 2026 09:55 AM GMT
Report

திருகோணமலை, கருமலையூற்றுப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலை பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர நேற்று (02) நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயேந்திரலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எச். எம். ஹேமந்தகுமார மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

அடையாளம் காண முடியாத அளவுக்கு

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய இப்பள்ளிவாசல், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1836 ஆம் ஆண்டு தனித்துவமான இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் | Deputy Defense Minister Visits Trincomalee

யுத்தம் நிறைவடைந்த பின்னர், 2008 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் 'உயர் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டு முப்படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

அதன்பின்னர் அங்கு பொதுமக்கள் எவரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி இரவு, அடையாளம் காண முடியாத அளவுக்கு இப்பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் பிடியிலிருந்த பள்ளிவாசல் காணிக்குள் நீண்டகாலமாக நுழைய முடியாமல் இருந்த கருமலையூற்றுப் பகுதி மக்கள், நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மக்களின் தனியார் காணிகளை

இதன்போது, இடித்து நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் தமது வரலாற்றுப் பள்ளிவாசலை மீண்டும் நிர்மாணிப்பதற்கும், அங்கு சென்று வழக்கம்போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கி, அதனைத் தங்களுக்கு மீட்டுத் தருமாறு மக்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் | Deputy Defense Minister Visits Trincomalee

இவ்விஜயத்திற்கு முன்னதாக, நேற்று காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர, "யுத்த காலத்தில் முப்படையினரால் பயன்படுத்தப்பட்ட மக்களின் தனியார் காணிகளை, இயலுமானவரை மிக விரைவில் உரிய மக்களிடமே மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனினும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்தில்கொண்டு, இது தொடர்பாக பாதுகாப்புச் சபையுடனும், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட இறுதி முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US