விவசாய நடவடிக்கைக்கு தேவையான முதற் கட்ட மானிய உரம் வழங்கி வைப்பு(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான முதற் கட்ட மானிய உரம் கம நல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாய நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு பெரும் போக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய இரசாயன உரம் கமநல சேவை நிலையங்களினுடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இம்முறை விவசாய நடவடிக்கை எழுபது வீதமான இராசயன உரத்தையும் முப்பது வீதமான சேதன உரத்தையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இந்த வாரம் முதல் சகல கம நல சேவை நிலையங்களிலும் முதற்கட்ட இராசயன உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்று கட்டங்களாக உர விநியோகம்

இந்த உர விநியோகம் மூன்று கட்டங்களாக மேற்கெள்ளப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், பூநகரி, இராமநாதபுரம், புளியம்பக்கணை, கண்டாவளை, பரந்தன், மற்றும் பளை ஆகிய கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri