வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மூன்றாம் நிலை நிபுணத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கான கற்கை நெறிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரச மற்றும் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் கூறியுள்ளார்.

கட்டாயமாக்கப்படும் சான்றிதழ்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படும் போது இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணத்துவம் மற்றும் திறமையுடைய பெண்களை இந்த வேலைவாய்ப்புக்காக அனுப்புவதே இதன் நோக்கம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri