நுவரெலியாவில் அடர் பனிமூட்டம்
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23.05.2026) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபனி நிலவியது.
குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் நிலவியது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை இடைக்கிடையே கொட்டி தீர்த்து வருகிறது.
கடுமையான பனிமூட்டம்
இதில் நுவரெலியா நகருக்கு உள் நுழையக்கூடிய பிரதான பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.

இதில் நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் போன்ற வீதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கிறனர்.
இலங்கைக்கு FBI புலனாய்வுக்குழு வந்துள்ளதாக வெளியான தகவல்! அமெரிக்கத்தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு






எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri