காய்ச்சலுக்கு மருந்து உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கை
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்து உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும், டெங்கு நோயின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர் எண்ணிக்கை
இதேவேளை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவு செய்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri