இலங்கையில் அதிகரிக்கும் அபாய நிலை! உடன் நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு பரவல் அபாயம் உயர்ந்துள்ளதாகவும், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளின் அடர்த்தி நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரெட்டோ குறியீடு
டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கையை அளவிடும் சர்வதேச அளவுகோலாக பயன்படும் ‘பிரெட்டோ குறியீடு’ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளில் இந்த அதிகரிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டெங்கு வைரஸை பரப்பும் முக்கிய வகையான ஈடிஸ் ஈஜிப்தி நுளம்புகளின் பரவல் நிலை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி, ஒரு பகுதி அல்லது நாட்டில் இந்த குறியீடு 3க்கு கீழாக வைத்திருக்கப்பட வேண்டும்.

டெங்கு பரவல் அபாயம்
ஆனால் இலங்கையின் பல இடங்களில் இந்த அளவை விட அதிகமான மதிப்புகள் பதிவாகியுள்ளன எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் டெங்கு பரவல் அபாயம் உயர்ந்துள்ளதாகவும், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.