யாழ். கோப்பாய் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட அச்சுவேலி தோப்பு, நவக்கரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்களாக இன்று குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
இதன் போது வர்த்தக நிலையங்கள் பொதுமக்களின் வீடுகள், கைவிடப்பட்ட காணிகள் என்பன சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
டெங்கு பரவும் வகையில் காணப்பட்ட காணிகளுக்கு பொது சுகாதார பரிசோதர்களால் அச்சுவேலி பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |