மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தியவர்கள் கைது
கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை கொழும்பு கோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி , முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.