வவுனியாவில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு (Photos)
ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் இன்று மதியம் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுர சந்தி ஊடாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'கோட்டாபய பதவி விலகு, இந்த அரசாங்கம் வேண்டாம், அமெரிக்காவுக்கு ஓடுங்கள், எங்களை வாழவிடு' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களையும் எழுப்பியதுடன் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் சகோதரர்களான மகிந்த, பசில் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.
மணிக்கூட்டுக் கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் அரை மணிநேரம் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.