மனித உரிமைகள் தினத்தில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி: தம்பிராசா செல்வராணி அழைப்பு

Missing Persons Batticaloa Sri Lanka
By Kumar Dec 09, 2022 07:17 AM GMT
Report

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாளை மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

நேற்று (08.12.2022) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அத்தினத்திலே வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

மனித உரிமைகள் தினத்தில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி: தம்பிராசா செல்வராணி அழைப்பு | Demonstration In Batticaloa Human Rights Day

ஆர்ப்பாட்ட பேரணி

அந்த வகையில் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும் ஒன்றிணைந்து வவுனியாவில் கந்தசாமி கோவிலில் இருந்து பேரணி ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம் வந்தடைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோல் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களும் இணைந்து மட்டக்களப்பில் கல்லடிப் பாளத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து காந்திப் பூங்கா வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

சர்வதேச மனித உரிமைகள் தினத்திலே இந்த நாட்டிலே எங்களுக்கான உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் எங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றோம். 

நீதி தேடும் போராட்டம்

மனித உரிமைகள் தினத்தில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி: தம்பிராசா செல்வராணி அழைப்பு | Demonstration In Batticaloa Human Rights Day

எமது உறவுகளுக்கான நீதி தேடும் போராட்டங்களைக் கூட எம்மால் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது.

நாங்கள் பதின்மூன்று வருடங்களாக எங்கள் பெறுமதியான மனித உயிர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். எமது உயிர்கள் வலுக்கட்டாயமாக வலிந்து காணாமலாக்கச் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

எந்தவித மனித உரிமைகளும் பேணப்படாத நிலையில் எதிர்வரும் நாளை (10.12.2022) சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம்.

இப்போராட்டத்திற்கு கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியற் பிரமுகர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் வலுச்சேர்த்து இப்போராட்டத்தில் எங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US