ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தப்பட்டு 5000 நாட்கள்: நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (Photos)
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கான நீதிக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று ( 04.10.2023) காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபிக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உளவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையும் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னலி கொடவிற்கான சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நீதியான விசாரணை பொறிமுறை
இன்று தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை கூறுகின்றனர் ஆனால் கடத்தியும் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை பொறிமுறை ஒன்று இலங்கையில் இதுவரையில் நேர்த்தியாக முன்னெடுக்கப்படவில்லை ஆகவே இதற்கான ஒரு சர்வதேச பொறிமுறை மூலமாக ஒரு விசாரணை நடத்தப்படும் பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் கடத்தப்பட்டு அக்கரைப்பற்றில் அவரது இறுதி மூச்சு நிறுத்தப்பட்டுள்ளதாக அவருடைய துணைவி சந்தியா எக்னலிகொட கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக அக்கரைப்பற்றில் உள்ள ஒரு காளி கோயிலில் ஒரு விசேட பூசையினை நடத்தி இருந்தார்.
மேலும் அவர் தனது கணவனை தேடி இன்றுடன் 5000 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவருக்கான ஒரு நீதியான விசாரணையோ அல்லது சர்வதேச விசாரணை இன்று வரைக்கும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
