இலங்கையில் மக்களுக்கான ஜனநாயகம் ஆட்சியாளர்களிடம் சிக்கியுள்ளது : ஸ்ரீநேசன் பகிரங்கம்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 07, 2024 08:30 AM GMT
Report
Courtesy: Satheesh

இலங்கை ஜனநாயகம் என்பது இதுவரை மக்களுக்கான ஜனநாயகம் ஆகவில்லை. அது இனநாயகமாவும் சக்திமிக்க தலைவர்களின் தன்னல நாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

ராஜபக்ச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

நாடாளுமன்றப் பதவி நீடிப்பு

மேலும் தெரிவிக்கையில், ”நாட்டை ஆளுகின்ற தலைவர்கள் மக்கள் ஜனநாயகத்தை தத்தமக்கு வேண்டிய தனிப்பட்ட நபர்களுக்கான ஜனநாயகமாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

democracy-people-in-sri-lanka-stuck-rulers-

தற்போது ஜனாதிபதி ரணில் எந்தத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை தனது சுயநல நோக்கில்தான் கையாளுகின்றார்.

இதே போன்று தான் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களது காலத்தில் ஜனநாயகத்தையும் சட்டங்களையும் தமக்கு சாதகமாக்கி கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி ரணில் தேர்தலை நடாத்தாமல் மக்கள் தீர்ப்பு (Referendum) நடாத்தவும் சிந்தித்தார். அதாவது தான் (ரணில்) மீண்டும் 5 வருடங்கள் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை விரும்புகின்றீர்களா? என்பதாக அத்தேர்தல் அமையும். ஆமென 50 வீதத்திலும் அதிகமானவர்கள் வாக்களித்தால், தனது பதவியைத் தொடரலாம் என்று ரணில் கருதினார்.

இத்தகைய மக்கள் தீர்ப்பை ரணிலின் மாமனாரான ஜெயவர்தனா 1982 இல் நாடாளுமன்றப் பதவி நீடிப்புக்காக செய்திருந்தார். இதன் மூலமாக ஏனைய வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடுத்து விட்டுத் தான் வென்று விடலாம் என்று ரணில் சிந்தித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி ரணில் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப் பணத்தைச் செலுத்தித் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் காட்டினார்.

democracy-people-in-sri-lanka-stuck-rulers-

இந்நிலையில், தன்னால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என்றார்.ஏனென்றால் தான் இப்போது ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளதாகக் கூறினார். அப்படியென்றால், இந்த ஜனாதிபதி ரணில், பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த பின்னர், கட்டுப்பணத்தினைச் செலுத்தி வேட்பாளராகி இருக்கலாம்.

அதனை ஜனாதிபதி செய்யாமை தேர்தலைக் குழப்புவதற்கான செயற்பாடு என்றுதான் கூற வேண்டியுள்ளது. மொத்தத்தில் ஜனாதிபதி இன்னும் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராகவில்லை என்பதையே மேற்படி திட்டமிட்ட நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இதனை வழமை போல் ஜனாதிபதி மறுத்தாலும் உண்மைகளை மூடி மறைக்க முடியவில்லை“  எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

கௌதாரிமுனையில் மீண்டும் பாரிய மணல் கொள்ளை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கௌதாரிமுனையில் மீண்டும் பாரிய மணல் கொள்ளை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US