பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்
"அரசியல் கைதிகள் விடுதலை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், திருக்கோணேஸ்வரம் - குருந்தூர்மலை பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முதலில் தாருங்கள். அதன்பின்னர் தேசிய பேரவையில் இணைவது குறித்து சிந்திக்கின்றோம்" என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் நேற்று(23.09.2022) பிரதமரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வின் இடையில் இடம்பெற்ற சந்திப்பு என்பதால், நேற்றைய அமர்வில் பங்கேற்காத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
பிரதமரின் அழைப்பு
இந்த சந்திப்பில், தேசிய பேரவையில் இணையுமாறு தமிழ் எம்.பிக்களை பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
அவருக்கு பதிலளித்த தமிழ் எம்.பிக்கள், "தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் - அரசியல் கைதிகள் விடுதலை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம், குருந்தூர்மலை விவகாரம் என்பவற்றுக்குத் தீர்வு காண உங்கள் அரசு உறுதியளித்தது.
ஆனால், அவற்றைச் செய்யவில்லை. மாறாக திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பு என்று புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றீர்கள்.
தேசிய பேரவையில் அங்கம் வகித்தல்
இந்த நேரத்தில், நாம் தேசிய பேரவையில் இருந்தால் எமது மக்களுக்கு பதில் கூற முடியாது. இதில் இருக்கும் நியாயங்களை - வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். அதன் பின்னர் தேசிய பேரவையில் அங்கம் வகிப்பது குறித்து நாம் சிந்திக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கூடிய விரைவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகின்றோம் என்று பிரதமர் பதிலளித்துள்ளார்.
அவ்வாறு தீர்வு கிடைத்த பின்னர் தேசிய பேரவையில் இணைவது குறித்து பரிசீலிப்பதாக மீண்டும் தமிழ் எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 17 மணி நேரம் முன்

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

உக்ரைனில் சுவிஸ் தயாரிப்பான போர் வாகனங்கள் நிற்கும் புகைப்படம்: சர்ச்சையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
