திட்டமிட்ட முடிவு தலைவலியாக மாறியது: தீர்மானத்தை கைவிட்டு மாற்று வழியை கையிலெடுத்த கோட்டாபய
புதிய வருடத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அமைச்சரவை மறுசீரமைப்பை கைவிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தீர்மானித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மட்டுமல்லாது ராஜாங்க அமைச்சர்கள் தமது உயர் அமைச்சு பதவிகளை வழங்குமாறு தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சில அமைச்சர்கள் மூன்றாவது தரப்பின் ஊடாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது தலைவலியாக அதிகரித்ததால், ராஜபக்சவினர் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன் இதன் போது அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், நிறுவனங்கள் தொடர்பாக மாத்திரம் மாற்றங்களை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri