இலங்கையில் உணவு வீண்விரயத்தினை குறைக்குமாறு கோரிக்கை
உணவுகளை வீணடிப்பதை முடியுமான அளவு குறைக்குமாறு பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாடுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவு தட்டுப்பாடு
உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளமை தெளிவாக உள்ளது. அதற்காக அச்சமடைந்து பதற்றமடைவதற்காக இந்த தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது முதல் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு பொருட்களை வீணடிப்பதை குறைத்து தேவையான அளவு உணவை மாத்திரம் தயார் செய்ய வேண்டும். அதனூடாக உணவு வீணடைவதை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
