நாட்டில் முடக்கப்பட்ட பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா திரிபு
ஏற்கனவே முடக்கப்பட்ட பகுதியிலேயே கோவிட் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மாநகரசபை பிராந்திய தொற்று நோய் நிபுணர் டொக்டர் தினுகா குருகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவிட் டெல்டா திரிபுடைய நோயாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த டெல்டா திரிபுடைய நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவான பகுதி ஏற்கனவே முடக்கப்பட்ட பகுதி என டொக்டர் குருகே தெரிவித்துள்ளார்.
பொரளை மற்றும் ஏனைய பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுமாறும்,8 முதல் 10 மணித்தியாலங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்படும் இடங்கள் பற்றி அறிவிக்கப்படும் அவற்றிற்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.