யாழில் கதலி வாழைப்பழங்களை பதப்படுத்தி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஆரம்பம்! (Photos)
கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழைக்குலைகள் பதப்படுத்தப்பட்டு டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

700 விவசாயிகளிடமிருந்து வாழைக்குலைகள் எதிர்பார்ப்பு
இந்த திட்டத்திற்கு 700 விவசாயிகளிடமிருந்து வாழைக்குலைகள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 300 விவசாயிகளிடமிருந்தே வாழைக்குலைகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாய நவீனமயமாக்க திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்று காணப்படுகிறது.

டொலர்களில் வருமானம்
இதன்மூலம் வாரத்துக்கு 40 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் தற்போது ஏற்றுமதி செய்ய முடிவதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம், 10 ஆயிரம் கிலோவிற்கு 12 ஆயிரம் டொலர்கள் வருமானமாக ஈட்ட முடியும் என கூறப்பட்டது.


இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan