அரசியல் தலையீடுகளின்றிய பொலிஸாரின் சுயாதீன செயற்பாட்டுக்கு நடவடிக்கை
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதை உறுதி செய்வதற்கும் விரைவான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த எதிர்பார்ப்பதாக புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சராக ஹேரத் இன்று (25) உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
இந்தநிலையில், தற்போது அமைச்சு எதிர்நோக்கும் மிக அழுத்தமான பிரச்சினை கடவுச்சீட்டுகளை வழங்குவதாகும் என்று அவர் கூறினார்.
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அத்துடன் கடவுச்சீட்டு வரிசைகளை முடிந்தவரை அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாற்று முறைகள்
புதிய கடவுச்சீட்டு முறை ஒக்டோபர் 15 மற்றும் 20இற்குள் அறிமுகப்படுத்தப்படும். அதற்குள் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாற்று முறைகளுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதை ஒப்புக்கொண்ட ஹேரத், அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைபடுத்துவதில் இதற்கு முன்னர் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யுமாறு உயர் பொலிஸ் அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.
சட்ட ஒழுங்கு
சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட முடியும்.
அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்ற வகையில் தமது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிப்பதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாரபட்சமின்றி, சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய பொறுப்பு, பொலிஸாருக்கு உள்ளது. அரசாங்கத்துடன் நெருக்கமானவர்கள் தவறு செய்திருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
