பொதுத் தேர்தலுக்கு தயார் நிலையில் பெப்ரல் கண்காணிப்பு குழு
ஜனாதிபதி தேர்தலின் போது செய்தது போன்று பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையான பெப்ரல் (PAFFREL) இன்று வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு விசேட ஆயத்தங்கள் எதுவும் தேவையில்லை எனவும், எனினும் கண்காணிப்பு நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தாம் தெளிவாக புரிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளனார்.
வேட்புமனு தாக்கல்
இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் காலத்தில் மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னும் பின்னும் தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை, இது நாட்டுக்கு சாதகமான அம்சமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரங்களும் சொத்துக்களும் பெருமளவிற்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது என்று ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam