இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு
இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய மார்க்கங்கள் குறித்து இந்தியா - இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள்
இந்த மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள், பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற இலக்கினை உறுதி செய்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு குறித்த பேச்சுகளே வருடாந்த பாதுகாப்பு மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
