முல்லைத்தீவில் டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (28.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியே படுகாயமடைந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவி படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது விபத்தில் காயமடைந்த மாணவியின் காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையை சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றையதினம்(29) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் இ.போ.ச பேருந்தினை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri