பொதுமக்களுக்கு எச்சரிக்கை! ”கோவிட் தொற்றுடன் இணைந்து கொண்ட டெங்கு”
இலங்கையில் கொவிட் தொற்றை போன்று டெங்கு தொற்றும் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜே மருத்துவமனை அறிவித்துள்ளது.
மருத்துவமனையின் வைத்திய கலாநிதி தீபால் பெரேரா இதனை எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
எனவே காய்ச்சல் மற்றும் ஏனைய குணங்குறிகளால் பாதிக்கப்படுபவர்கள், குருதி அணுக்களின் எண்ணி்க்கை தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இதேவேளை சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டு சிகிச்சை அறைகள் அதிகரிக்கப்பட்டு தற்போது மூன்று சிகிச்சை அறைகளில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நோய் தொற்றுக்கண்டவர்கள் மத்தியில் சுவாசப்பிரச்சினை இருந்தால் மாத்திரம், மருத்துவனைகளை நாடுமாறும் ஏனைய குணங்குறிகள் உள்ளவர்கள் 1390 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு வீடுகளிலேயே, சிகிச்சை முறைகளை கையாளுமாறும் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நேற்று வரையான 26 நாட்களில் 6 ஆயிரத்து 896
டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்
சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.