இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரி பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பிரகடனம்!

demanding nomination of sri lanka to the international court of justice!
By Independent Writer Feb 26, 2021 05:08 PM GMT
Independent Writer

Independent Writer

in சர்வதேசம்
Report

இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரி பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பிரகடனம்!பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் (ICPPG) தெரிவித்துள்ளது.

தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையினை (IIIM) உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிதந்தர விசேட பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும்வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து ICPPG இன்று ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு இலங்கையில் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமது தீவிர நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி 22.02.2021 ஆம் திகதி கடிதமொன்றினை ICPPG சமர்ப்பித்துள்ளது. மேலும் வெளியே கசிந்துள்ள பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள திட்டமுன்மொழிவில் ICC மற்றும் IIIM தொடர்பாக எதுவித விடயங்களும் உள்ளடக்கப்படாமைக்கும் 500 இற்கு மேற்பட்ட புலம்பெயர் அமைப்புக்களினால் பிரித்தானிய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானியா கொண்டு வரவேண்டும்’என்ற கோரிக்கைக்கு இதுவரை பதிலேதும் அனுப்பாமைக்கும் அதிருப்தியை ICPPG அக்கடிதத்தின் மூலமாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கெதிரான இனப்படுகொலையை இன்று வரை தொடர்ந்து வருவதுடன் நினைவுச்சின்னங்களை அழித்தல், சமத்துவத்தை தடை செய்தல் போன்றவற்றுடன் மொழி, வரலாற்றினை நீக்குதல் போன்றவற்றினூடாக தமது இனவாதப்போக்கை வெளிப்படுத்தி வருவதுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1மற்றும் 40/1 தீர்மானங்களின் பொறுப்புக்கூறல் செயல்முறையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியமையையும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்திலிருந்து உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கோரிய அதே கோரிக்கையே இதுவெனவும் அதாவது 2015 ஆம் ஆண்டு உலகெங்கிலுமுள்ள 1.5 மில்லியன் மக்கள் கையெழுத்திட்டு சமர்ப்பிக்கப்பட்ட ‘இலங்கையை ICC க்கு பரிந்துரைக்க வேண்டும்’என்ற மனு மூலமாகவும், 2019 ஆம் ஆண்டு சர்வதேச நீதிபதிகள் ஆணையம் இலங்கையை ICC க்கு பரிந்துரைப்பது ‘முழு உத்தரவாதம்’ என்று கூறியதன் மூலமும், 2019 ஆம் ஆண்டு ICPPG இனால் பிரித்தானிய பிரதமரிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக’என்னும் மனு மூலமும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையினை உருவாக்கும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவருமாறு 250புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை மூலமும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதம் மூலமும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி 500 இற்கு மேற்பட்ட புலம்பெயர் அமைப்புக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானியா கொண்டு வரவேண்டும்’என்ற கோரிக்கை மூலமும், இலங்கை இராணுவம், பொலிஸாரின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை எழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’எழுச்சி போராட்டத்தின் மூலமும் மற்றும் ஏனைய ஆதாரங்களின் மூலமாகவும் இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை செயற்படுத்தத் தவறிவிட்டன என்பதற்கு ஆதாரங்களாகும் என மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குறைந்தது 100 சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களை உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளுடன் ICPPG ஆவணப்படுத்தியுள்ளதனையும் தற்போது இலங்கையில் மர்ம மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் பெரும்பாலான சடலங்களில் சித்திரவதைக் காயங்கள் காணப்படுவதால் தற்போதைய சூழ்நிலையில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுபவர்கள் உடனடியாகவே கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் வீசப்படுகின்றன அல்லது தூக்கில் தொங்கவிடப்பட்டு தற்கொலைகளாக விசாரணைகளின்றி மூடிமறைக்கப்படுவதனாலேயே மர்மக் கொலைகள் அதிகரித்துள்ளதாக பல அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஒருமித்த குரலுக்கு பிரித்தானியா செவிசாய்ந்து, தமது கோரிக்கைக்கு பதில் தராவிட்டால், தமது பணிப்பாளர்களில் ஒருவரான திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள் வியாழன் (25.02.2021) முதல் உண்ணாவிரத்த்தை ஆரம்பிப்பார் எனவும் அவர்களின் கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை பிரித்தானிய அரசிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையினை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை பிரித்தானிய அரசின் தீர்மானத்தில் உள்ளடக்க கோரி ICPPG இனால் மேற்கொள்ளப்படவுள்ள சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு தோள் கொடுக்குமாறு ICPPGயின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய, திருமதி. கிரிஸ்டி நிலானி காண்டீபன் அவர்கள் கேட்டுக்கொள்வதாகவும் மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US