அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு: இலங்கை கூறிய நியாயம்
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இலங்கை பிணைக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் சில முடிவுகளை எடுக்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
கட்டணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வோசிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட சில அளவுருக்களுக்கு இணங்க வேண்டும் என்ற விடயத்தை அமெரிக்காவிடம் தெரிவித்ததாக பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது மற்ற நாடுகள் எதிர்கொள்ளாத சில சவால்கள் இலங்கைக்கு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமற்ற வரிகள்
இந்தநிலையில்,கட்டணப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை சந்தையில் நியாயமான அணுகலை அமெரிக்கா கோரியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்க தயாரிப்புகள் மீது இலங்கையில் நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் வெற்றி ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான வழிகளை இலங்கையும் அமெரிக்காவும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து மொத்தமாகவும் பாரிய அளவிலும் வாங்கப்பட்ட பொருட்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சூரியப்பெரும கூறியுள்ளார்.
இதன்படி இலங்கை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யக்கூடிய ஒரு முக்கிய பகுதியாக எரிசக்தித் துறை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
