சப்புகஸ்கந்த பெட்ரோல் உற்பத்தி அலகை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெட்ரோல் உற்பத்தி அலகை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலகில் இடம்பெறவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடின்றிய எரிபொருள் விநியோகம்
மேலும், பெட்ரோல் உற்பத்தி அலகு இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கு அவசியமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தேவையான முன்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
